News December 2, 2024

வாக்காளர் எண்ணிக்கை: EC-க்கு SC சரமாரி கேள்வி

image

வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் EC-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பி உள்ளது. வாக்குச்சாவடியில் வாக்காளர் எண்ணிக்கையை 1,200இல் இருந்து 1,500ஆக அதிகரிக்க EC முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த SC, அதற்கான காரணம் குறித்து 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

Similar News

News April 28, 2025

ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

image

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.

News April 28, 2025

3 ஆண்டுகள் சிறை.. பாக். குடிமக்களுக்கு எச்சரிக்கை!

image

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.

News April 28, 2025

சிறுநீரை குடித்து காயத்தில் இருந்து மீண்ட நடிகர்!

image

தனது சொந்த சிறுநீரை குடித்து முழங்கால் காயத்தில் இருந்து குணமானதாக பாலிவுட் நடிகர் பாரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். பட ஷூட்டிங்கின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த இயக்குநர் வீரு தேவ்கன் தன்னை சந்தித்து, தினமும் எழுந்ததும் சிறுநீரை குடிக்கச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 15 நாள்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, டாக்டரை பார்க்கச் சென்றபோது, அவரே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!