News October 23, 2024

வாலிபால் அணி வீரர்கள் வரும் 27ஆம் தேதி தேர்வு

image

கடலூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் மாவட்ட அளவில் 23 வயதுக்குட்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான அணி தேர்வு வரும் 27ஆம் தேதி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 01/01/2002 அன்றோ அதற்குப் பிறகோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம். கடலூர் மாவட்டத்தினர் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என கடலூர் மாவட்ட வாலிபால் கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

கடலூர் அருகே பெரும் சோகம்!

image

அரியநாச்சியில் நேற்று சாலை <<18859688>>விபத்தில் <<>>இறந்தவரை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் 4 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியநாச்சி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில், வசந்தா (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே நாளில் அரியநாச்சி பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 15, 2026

ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த ஒருவர் கைது

image

பெரியகுமட்டியை சேர்ந்த அசோகன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் ஏல சீட்டு நடத்துவதாக கூறி கடலூர் பகுதி சேர்ந்த பலரிடம் சீட்டு பிடித்து சீட்டு முடிந்த பிறகும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். கிருபாகரன், சிவராமகிருஷ்ணன், திருஞான செல்வம், செல்வராஜ் ஆகியோர் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரில் ரூ.13,98,912 ஏல சீட்டு பணத்தை ஏமாற்றிய அசோகன் (43) என்பவரை இன்று கைது செய்தனர்.

News January 15, 2026

கடலூர்: சாதிச்சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற ஜன. 20 முதல் 23 வரை நடைபெறும்.

error: Content is protected !!