News August 15, 2025

தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

image

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.

Similar News

News August 15, 2025

2 பைசாவுக்கு டீ.. ஒரு குட்டி டைம் டிராவல்

image

‘1 பைசா கொடுத்தா பெரிய பொட்டலத்துல கடலை பருப்பு தருவாங்க’ என நமது தாத்தா சொல்லக் கேட்டிருப்போம். இன்றைய சூழலில் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு பெருகும் மக்கள்தொகை, ரூபாய் மதிப்பு என பல காரணிகள் உள்ளன. இந்நிலையில், சுதந்திரம் அடைந்த 1947-ல் பொருள்களின் விலையையும், இன்றைய விலையையும் மேலே உள்ள படங்களில் காணலாம். இதை நீங்கள் முதல்முதலாக எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்?

News August 15, 2025

BREAKING: நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்

image

நடிகை கஸ்தூரி, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கஸ்தூரி, வலதுசாரி சிந்தனையாளராக தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் மேடைகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், திடீரென அதிகாரப்பூர்வமாக இன்று(ஆக.15) தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார். மேலும், நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

News August 15, 2025

ரயிலில் இந்த கோடுகளின் அர்த்தம் தெரியுமா?

image

எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் இருக்கும் இந்த வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகளின் அர்த்தம் தெரியுமா? இதுவும் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கப்பட்டிருப்பவை தான். இந்த கோடுகள் அப்பெட்டியின் வகையை குறிக்கின்றன. வெள்ளை கலர் கோடுகள் இருந்தால், அது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் என அர்த்தம். அதே நேரத்தில், மஞ்சள் கலர் கோடுகள் இருந்தால், அது மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியாகும். SHARE IT.

error: Content is protected !!