News March 31, 2025
Vodafone கொடுத்த ₹36,950 கோடி.. ஓகே சொன்ன அரசு

Vodafone Ideaவின் ₹36,950 கோடி மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைத் தொகைக்கு ஈடாக, பங்குகளை பெற அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள அந்நிறுவனத்தின் 22.6% பங்குகள் அரசிடம் உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் படி அது 48.99% உயரும். இதன்மூலம், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய ஒற்றை பங்குதாரராக அரசு மாறும்.
Similar News
News April 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
News April 3, 2025
சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள அணிகள்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ODI, 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நவ.30ஆம் தேதி தொடங்குகிறது.
News April 3, 2025
அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.