News March 31, 2025
Vodafone கொடுத்த ₹36,950 கோடி.. ஓகே சொன்ன அரசு

Vodafone Ideaவின் ₹36,950 கோடி மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைத் தொகைக்கு ஈடாக, பங்குகளை பெற அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள அந்நிறுவனத்தின் 22.6% பங்குகள் அரசிடம் உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் படி அது 48.99% உயரும். இதன்மூலம், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய ஒற்றை பங்குதாரராக அரசு மாறும்.
Similar News
News April 1, 2025
இவர் யார் தெரியுதா?

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் AI-ஐ பயன்படுத்தி ‘ஜிப்லி’ கதாபாத்திரங்களாகவே தங்கள் புகைப்படத்தை மாற்றி டிரெண்ட் செய்து வருகிறார்கள். CM ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோரின் புகைப்படங்களும் இதேபோல் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதையடுத்து இன்னொரு அரசியல் பிரபலமும், தனது படத்தை (மேலே) வெளியிட அதுவும் ட்ரெண்டாகி வருகிறது. அவர் யார்னு தெரிஞ்சா, கீழே பதிவிடுங்க.
News April 1, 2025
மாதம் ரூ.5000… அப்ளை பண்ணுங்க

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு ஏப்.15 வரை நீட்டித்துள்ளது. 12th, Diploma, ITI, Degree படித்த, வேலையில்லாத 21-24 வயதினர் இதில் இணையலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதன் மூலம் டாப்-500 நிறுவனங்களில் மாதம் ₹5,000 உதவித் தொகையுடன், ஓராண்டு internship பெறலாம். மேலும், ஒருமுறை ₹6,000 கிடைக்கும். இணைய: https://pminternshipscheme.com/
News April 1, 2025
ரூ.2,000 நோட்டுகள் 98.21% திரும்பிவிட்டன: ரிசர்வ் வங்கி

ரூ.2,000 நோட்டுகள் 98.21% திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. 2023 மே மாதம் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக RBI அறிவித்தது. இதையடுத்து ரூ.2,000 நோட்டுகளை திருப்பி அளிக்க 2023 அக்.7 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், RBI அறிவிப்பில், ரூ.6,366 கோடி மதிப்பு ரூ.2,000 நோட்டுகள் தவிர்த்து அனைத்து நோட்டுகளும் திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது.