News April 12, 2024
அறிகுறியே இல்லாமல் கண் பார்வை போகலாம்

கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு வகை நோய். இதன் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. பரிசோதனையின் மூலமே இந்த நோயை கண்டறிய முடியும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையான பார்வை இழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயது வித்தியாசம் இன்றி பாதிக்கும் இந்நோய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.
Similar News
News November 8, 2025
உதயநிதிக்கு புதிய பட்டம் கொடுத்த CM ஸ்டாலின்!

அறிவு திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என உதயநிதியிடம் CM ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். திமுகவின் 75வது அறிவுத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அவர், உதயநிதியை ‘கொள்கை இளவல்’ என குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார். மேலும், திமுகவின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை எனவும், திமுக போல் வெல்லவேண்டும் என்றால் இக்கட்சியை போல அர்ப்பணிப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
News November 8, 2025
‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
News November 8, 2025
X-Ray பிறந்த நாள் இன்று!

உடலை அறுக்காமலேயே, உள்ளே உள்ள பிரச்னைகளை எளிதாக கண்டறிய அதிகம் பயன்படுத்தும் ஒன்று X-Ray. நவ.8, 1895-ல், ஜெர்மானிய விஞ்ஞானி Wilhelm Conrad Rontgen இந்த கதிர்களை கண்டுபிடித்தார். கேத்தோடு கதிர்களை பரிசோதனை செய்தபோது, ஒரு கதிர் மட்டும் அட்டை வழியாக பாய்வதை கண்டார். தன் மனைவியின் கை எலும்புகளையே அவர் முதல் X-Ray படமாக பதிவு செய்தார். இதற்காக 1901-ல் அவர் இயற்பியலில் முதல் நோபல் பரிசை பெற்றார்.


