News July 3, 2024
விஷச்சாராயம்: வெளியானது ஆய்வக அறிக்கை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே, உயிரிழந்தவர்கள் குடித்தது சாராயம் அல்ல, வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அந்த தண்ணீரில் 29.5% மெத்தனால் கலக்கப்பட்டது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
ஜிஎஸ்டி தாக்கத்தால் சிலிண்டர் விலை குறையுமா?

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாளை அமலாகும் நிலையில், பல பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சமையல் சிலிண்டரின் விலை குறையுமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5%, வணிக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டி வரிகள் உள்ளன. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹905-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையே சில நாள்களுக்கு தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 21, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

அக்.20-ல் திங்களன்று தீபாவளி வருவதால் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், கடந்த ஆண்டைபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்னரே அறிவித்தால் ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய வசதியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை பரிசீலித்து அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. SHARE IT.
News September 21, 2025
துரோகத்தின் கூடாரம் அதிமுக: CM ஸ்டாலின்

இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் என்றால் முதலில் வந்து நிற்பது திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தலாக் சட்டம் வந்த போது அதிமுக இரட்டை வேடம் போட்டது என்றும், அதனால் தான் அன்வர் ராஜா போன்றவர்கள் துரோகத்தின் கூடாரமான அதிமுகவை புறக்கணித்து திமுகவில் இணைந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், CIA-விற்கு எதிராக போராடியவர்கள் மீது அதிமுக அரசு தடியடி நடத்தியது என்று CM ஸ்டாலின் சாடினார்.