News March 17, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் C-VIGIL என்ற தொலைபேசி செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.

Similar News

News August 13, 2025

விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திருட்டு வழக்கில் வடமாநில இளைஞர்கள் கைது

image

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பட்டமுத்து. இவர் தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக கடந்த 10-ம் தேதி ஆம்னி பேருந்தில் வந்தபோது அழகாபுரியில் உள்ள ஹோட்டலில் இரவு உணவுக்காக பேருந்து நின்றுள்ளது. உணவு சாப்பிட்டு விட்டு, வந்து பார்த்த போது கைப்பையில் இருந்த தங்க நகை திருடு போனது.நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த அப்பாஸ்கான்,அக்ரம்கான், மோலா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

News August 12, 2025

விருதுநகர்: தலையாரி வேலைக்கு விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!

image

விருதுநகர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.19 அன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> அறிவிப்புகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!