News March 18, 2024
பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி

2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக RCB அணி வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இந்தியா திரும்பினார் கோலி. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோலி அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
Similar News
News September 5, 2025
அரசு கல்லூரி: விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20-ல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
News September 5, 2025
வெள்ளிக்கிழமையில் துர்க்கையின் அருளை பெற

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனியின்(மகாதேவி) மகள் தெய்வத்தை நான் தியானிக்கிறேன்!
ஓ, துர்கா தேவி எனக்கு உயர்ந்த புத்தியைக் கொடுத்தார்!
என் மனதை ஒளிரச் செய்வாயாக! SHARE IT.
News September 5, 2025
FB, Insta உள்பட 26 செயலிகளுக்கு தடை

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், X உள்பட 26 சோஷியல் மீடியா செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. சோஷியல் மீடியாக்கள், சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவதை நோக்கமாக கொண்டு சமீபத்தில் அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் முறையாக பதிவு செய்யாத செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், டிக்டாக் செயலி பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு தடை இல்லை.