News August 19, 2025
VIRAL: வெள்ளத்தின் நடுவே ஒரு ‘செல்பி’!

வரலாறு காணாத கன மழையால் மகாராஷ்டிராவின் மும்பை, புனே போன்ற நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒருவர் சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகியுள்ளது. அனைத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணி, என்ஜாய் பண்ற மனப்பான்மை இந்தியர்களிடம் அதிகரித்து விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News January 24, 2026
சாய் பல்லவியை பாராட்டிய ஆமிர் கான்

சாய் பல்லவி தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கானின் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ‘ராமாயணா’ படத்திலும் நடித்துள்ளார். ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஆமிர் கான், சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளதாகவும், தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.
News January 24, 2026
ஜனவரி 24: வரலாற்றில் இன்று

*1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்ததினம். *1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர். *1966 – இந்திய இயற்பியலாளர் ஹோமி பாபா மறைந்த நாள். *1984 – இசையமைப்பாளர் டி.இமான் பிறந்தநாள். *இன்று தேசிய பெண் குழந்தை நாள்.
News January 24, 2026
468 நாட்களுக்கு பிறகு சூரியகுமார் அரைசதம்

T20 இந்திய அணி கேப்டன் சூரியகுமார், நியூசிலாந்து எதிரான 2-வது T20 போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்கு வகித்தார். இந்த போட்டியில், 23 இன்னிங்ஸ்களுக்கு (468 நாட்கள்) பிறகு அரைசதம் விளாசினார். அதுவும், வெறும் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். T20 உலகக் கோப்பைக்கு பின்னர் அவரது ஃபார்ம் குறித்து எழுந்த கேள்விகளுக்கும், சந்தேகங்களும் நேற்றைய போட்டியில் பதிலளித்தார்.


