News April 26, 2024
மணிப்பூரில் வெடித்தது வன்முறை

புறநகர் மணிப்பூர் தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. முதல்கட்ட தேர்தலில் வன்முறை நிகழ்ந்ததால், 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, உக்ருல் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
3-ம் உலக போர் மூளுமா?

ஈரானுக்கும் எதிராக பிரச்னையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் US- இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனா, ஈரானுக்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னை ஆசியா, ஐரோப்பா நாடுகளுக்கும் பரவி 3-ம் உலக போர் மூளுமா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. போரால் பெரும் உயிரிழப்புகளும், நீண்டகால பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
News March 3, 2026
சற்றுமுன்: வங்கிக் கணக்கில் மேலும் ரூ.2,000 வந்தது..

முதியோர், கைம்பெண்கள், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதியாக இன்று ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை ₹1,200, சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
BREAKING: கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

காங்., கேட்கும் கூடுதல் தொகுதிகளை அளிக்க திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், இன்று நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தைக்குபின் கூட்டணியிலிருந்து காங்., வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., வெளியேறும்பட்சத்தில் காலியாகவுள்ள 4 ராஜ்யசபா இடங்களில் தேமுதிகவிற்கு ஒன்று, மீதமுள்ள 3 -ல் திமுகவே களமிறங்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களையும் இன்று மாலை திமுக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


