News April 14, 2024
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது!

மணிப்பூரில் மெய்தி & குகி இன மக்களுக்கு இடையே மீண்டும் மூண்ட மோதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்நவுபால் மாவட்டத்தில் உள்ள பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில், மெய்தி இனத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News July 11, 2025
பெண்ணின் வாக்காளர் அட்டையில் நிதிஷ் புகைப்படம்

பீகாரில் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் CM நிதிஷ் குமாரின் புகைப்படம் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்தில் முகவரி மாற்றத்திற்கு மாதேபுராவை சேர்ந்த அபிலசா குமாரி விண்ணப்பித்துள்ளார். அதன்படி, முகவரி மாற்றப்பட்ட நிலையில், அபிலசாவுக்கு பதிலாக நிதிஷின் படம் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News July 11, 2025
ராசி பலன்கள் (11.07.2025)

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – ஓய்வு ➤ மிதுனம் – ஜெயம் ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – நன்மை ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – ஜெயம் ➤ தனுசு – மறதி ➤ மகரம் – தோல்வி ➤ கும்பம் – அசதி ➤ மீனம் – வரவு.
News July 11, 2025
28 மாவட்டங்களில் நள்ளிரவு மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு ஒரு மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம், திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, கிருஷ்ணகிரி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம்.