News May 12, 2024
வனப்பகுதி மக்கள் மீதான வன்முறை கண்டனத்திற்குரியது

ஒகேனக்கல் அருகே வனப்பகுதி மக்களை தாக்கிய காவல்துறையின் செயலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து வனத்துறை, காவல்துறை அராஜகம் செய்துள்ளதாக சாடிய அவர், மனிதாபிமானம் இன்றி வன்முறையில் ஈடுபடுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என்று கண்டித்தார். மேலும், பூர்வகுடி மக்கள் அச்சுறுத்தலின்றி வாழ அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News November 18, 2025
திருவள்ளூருக்கு பெருமை சேர்த்த பாலபுரம் ஊராட்சி

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 6வது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய அளவில் நீர் மேலாண்மையில் 3வது இடம் கிடைத்தது. இதற்கான விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பிடம் வழங்கினார்.
News November 18, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு ₹2,000.. வந்தது அப்டேட்

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹2,000 வழங்க CM ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வழக்கம்போல் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
காங்கிரஸில் சேர விஜய் முயற்சி… பரபரப்பு தகவல்

விஜய் 2010-ல் ராகுலை சந்தித்து காங்கிரஸில் இணைய முன்வந்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல, சில காரணங்களால் விஜய் தங்கள் கட்சியில் இணைய முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக, காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா என யூகங்கள் எழுந்த நிலையில், ஜோதிமணி இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள்(காங்.,) இதுவரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


