News March 23, 2025
விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்… எச்சரிக்கை!

நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ₹1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ₹5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000, டிரிபிள்ஸ் போனால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும். SHARE IT!
Similar News
News March 25, 2025
ஹுசைனின் நிறைவேறாத கடைசி ஆசை

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹுசைனி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை சந்தித்து வில்வித்தையை தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் இன்று காலமான நிலையில், கடைசி ஆசை நிறைவேறாமலே உயிர் பிரிந்துவிட்டது.
News March 25, 2025
ரோஹித், பாண்டியா எதிர்ப்பு.. ஆனாலும் அசராத தோனி!

ஐபிஎல்லில் Impact Player விதி முதலில் அமல் செய்யப்பட்ட போது, அது தேவையில்லாதது என நினைத்ததாக தோனி தெரிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பேட்ஸ்மென்கள் ஆக்ரோஷமாக விளையாட இந்த விதி ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படிதான் டி20 ஃபார்மெட் கிரிக்கெட் மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ரோஹித், பாண்டியா இந்த விதியினை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2025
BREAKING: சேனலை மூடுகிறார் சவுக்கு சங்கர்

தான் நடத்தும் ’சவுக்கு மீடியா’ யூடியூப் சேனலை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தாயின் உயிரை பணயம் வைத்து சேனல் நடத்த விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இது இந்த சமூகத்தின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?