News March 20, 2025
விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்… எச்சரிக்கை!

நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ₹1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ₹5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000, டிரிபிள்ஸ் போனால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும். SHARE IT!
Similar News
News September 18, 2025
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கருக்கு ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் வெள்ளித்திரைக்கான கதவை விசாலமாக திறந்தது. பின்னர் ‘மாரி’ படத்தில் இவர் நடித்த சனிக்கிழமை கதாபாத்திரம், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அன்னைக்கு காலைலே ஆறு மணி’ காமெடி காட்சிகள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட். அவரது நகைச்சுவை காட்சிகளை பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு பிடித்த காட்சி எது?
News September 18, 2025
ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

மறைந்த நகைச்சுவை நடிகர் <<17754481>>ரோபோ சங்கர்<<>> மறைவுக்கு முதல் நபராக நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் ‘தம்பி ரோபோ சங்கர், போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?’ என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
News September 18, 2025
அறைய சொன்ன KS அழகிரிக்கு கங்கனா பதிலடி

ஏர்போர்ட்டில் CRPF வீரர், கங்கனா ரனாவத்தை அறைந்தது குறித்து பேசிய KS அழகிரி, கங்கனா இந்த பக்கம் (தென்னிந்தியா) வந்தால் அவரை அறைந்துவிடுங்கள் என்று காட்டமாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய கங்கனா, இந்தியாவில் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யாரும் நம்மை தடுக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பெண்களுக்கெதிரான அவதூறு கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்ககூடாது என்றும் கூறினார்.