News March 16, 2024
நெல்லை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 45 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
நெல்லை: மழைக்காலத்தில் இந்த App பயன்படுத்துங்க

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை குறித்து விபரங்களை அறிந்து கொள்ள “டி என் அலர்ட்” என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த செயலியில் மழை மற்றும் வானிலை குறித்து 4 நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகும். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும்.
News October 22, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.22] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 22, 2025
வேளாண்மை பட்டதாரிகளுக்கு புதிய வசதி

நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.