News March 16, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
நாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆக.9) ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் மற்றும் கைபேசியின் பதிவு மாற்றம் போன்ற சேவைகளுக்கு மனு அளிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
BREAKING: விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்

விழுப்புரத்தில் 8-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தமுமுக வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்துல் ஹக்கீம் நடத்தி வந்த உரக் கம்பெனியில் பணிபுரிந்த பெண்களுக்கு ஆபாசமாக செய்திகள் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெண்களில் உறவினர்கள் அப்துல் ஹக்கீமின் உரக் கம்பெனியை அடித்து நொறுக்கினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 8, 2025
விழுப்புரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆக.8) திண்டிவனம் நகராட்சி, கானை ஒன்றியம், விக்கிரவாண்டி ஒன்றியம், முகையூர் ஒன்றியம், மரக்காணம் ஒன்றியம் மற்றும் கோலியனூர் ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.