News March 16, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

image

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதி தாமிரபரணி ஆற்றின் 50 வயது மதிக்கத்தக்க சிவப்பு நிற சேலை அணிந்த பெண் சடலம் நேற்று மீட்கபட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. தகவலறிந்து ஆத்தூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பெண் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 23, 2025

திருச்செந்தூர் வாலிபர் கொலை., 5 பேர் கைது

image

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த மணிகண்டன்(30) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தோப்பூர் அருகே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூரை சேர்ந்த நட்டார், கணேசன் மற்றும் 3 சிறார்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 22, 2025

தூத்துக்குடியில் நாளை (செப்.23)இங்கெல்லாம் மின்தடை

image

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (23,மடத்தூர் திரவிய ரத்தின நகர் அசோக் நகர் ஆசிரியர் காலனி ராஜூ நகர் சின்னமணி நகர் 3வது மைல் புதுக்குடி டைமன் காலனி இபி காலனி மில்லர்புரம் பி என் டி காலனி எப் சி ஐ குடோன் நிகிலேசன் நகர் ஆசீர்வாத நகர் பைபாஸ் சாலை சில்வர் புறம் சுப்பிரமணியபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!