News March 16, 2024
ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 141 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
டெட் தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் டெட் தேர்வுக்கு மண்டல அளவில் முன்மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் எட்டாம் தேதி ஈரோடு வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இந்த முன்மாதிரி தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள https://forms.gle/ovgkrtpSSQbAeP6L7 லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 6, 2025
ஈரோடு: இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 9 இல் திண்டல் வெள்ளாளர் கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பிளாக் பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், கண்டிப்பாக ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு போன்ற ஏதேனும் ஒன்றை அசலாக கொண்டு வர வேண்டும் 9.30 பிறகு தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வாணையர் சுஜாதா தகவல்.


