News March 16, 2024
கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 66 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
கடலூர்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

கடலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<
News January 8, 2026
கடலூர்: விவசாயி கொலையில் ஒருவர் கைது

கொங்கராயனூரைச் சேர்ந்தவர் தக்ஷிணாமூர்த்தி (35). விவசாயியான இவர் கடந்த ஜன.5 அன்று மேல்பட்டாம்பாக்கம் செக் போஸ்ட் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்த போது, பி.என். பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் வழி விடாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தட்சிணாமூர்த்தியை சுரேஷ் கட்டையால் தாக்கியதில், தக்ஷிணாமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீசார் சுரேஷை கைது செய்தனர்.
News January 8, 2026
கடலூர்: நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


