News December 30, 2024

கைதான தவெகவினரிடம் விஜய் சொன்ன வார்த்தை!

image

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பாக விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை, பொதுமக்களிடம் விநியோகித்ததாக புஸ்ஸி ஆனந்த் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 மணிநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் விஜய் போனில் பேசினார். அப்போது “தைரியமாக இருங்கள்.. நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன்” என விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 6, 2026

BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு அமைப்புகளும், சங்கங்களும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை கட்சிகளிடம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனப் பொ.செ., மருத்துவர் G. கருணாமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினர். அத்துடன், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்தனர்.

News March 6, 2026

விஜய்க்காக காத்திருக்கிறாரா EPS?

image

20+ கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை CM ஸ்டாலின் அமைத்துள்ளதால், தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என EPS எண்ணுகிறாராம். இந்நிலையில், தனித்து போட்டியிட்டால் தேர்தல் நேரத்தில் திமுகவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என விஜய்க்கு அதிமுக தலைவர்கள் மூலம் EPS தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விஜய் நிறைய யோசிப்பதால், அவரது முடிவுக்காக EPS காத்திருக்கிறாராம்.

News March 6, 2026

இன்று சனிப்பெயர்ச்சி.. இதெல்லாம் செய்யாதீங்க!

image

இன்று காலை 8.26 மணிக்கு சனிபகவான், கும்பத்தில் இருந்து மீனத்திற்கு செல்கிறார். எனவே, சனிப்பெயர்ச்சி நாளில் செய்யக்கூடாதவை பற்றிய விவரம் *கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது *பகல் நேரத்தில் தூங்கக்கூடாது *அசைவத்தை தவிர்க்கவும் *பிறரிடம் இருந்து கடன் வாங்குவது, நகையை அடமானம் வைக்க கூடாது *யாரிடமும் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது *நெகட்டிவான வார்த்தைகளை பேசக் கூடாது

error: Content is protected !!