News April 15, 2025
வக்ஃப் சட்டத்திற்கு எதிரான விஜய்யின் மனு ஏற்பு

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வக்ஃப் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உள்பட வழக்கு தொடர்பான 10 மனுக்கள் நாளை விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
Similar News
News December 6, 2025
செல்போன் ரீசார்ஜ் செலவு குறைந்தது.. HAPPY NEWS

வாடிக்கையாளர்களின் செல்போன் ரீசார்ஜ் செலவை குறைக்கும் வகையில், அசத்தலான ஆஃபரை BSNL கொண்டு வந்துள்ளது. அதாவது, ₹347-க்கு ரீசார்ஜ் செய்தால், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 100 SMS உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நெட்வொர்க்குகளில் இந்த சேவைகளை பெற ₹500 வரை செலவிட வேண்டி இருக்கும். SHARE IT.
News December 6, 2025
நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பதவி வழங்கிய விஜய்

தவெகவில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பதவியை விஜய் வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான அவர், நம்மோடு பயணிக்க இருப்பது பெருமகிழ்ச்சி என விஜய் தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் ஆனந்துடன் இணைந்து நாஞ்சில் சம்பத் பணியாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 6, 2025
காலத்தினாற் செய்த உதவி.. தமிழகத்துக்கு இலங்கை நன்றி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, தமிழக அரசு தரப்பில், ₹1.19 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்நாட்டின் ஊவா மாகாண Ex CM செந்தில் தொண்டமான், இந்த மனிதாபிமான உதவிக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில், தமிழகம் செய்த பேருதவி தமது மக்களின் மீட்சிக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.


