News February 10, 2025

எல்லை மீறினால் பதவி பறிப்பு : விஜய் மாஸ்டர் ப்ளான்

image

மாவட்டச் செயலாளர்களை கண்காணிக்க புதிய குழு அமைக்க தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்துள்ளார். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்களை போல் செயல்படுவதாகவும், தவெகவில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்காமல், பணம் வாங்கிக் கொண்டும், சாதி பார்த்தும் பதவி கொடுப்பதாகவும் தவெக நிர்வாகிகள் புகார் கூறியிருந்தனர். இந்நிலையில், எல்லை மீறும் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

Similar News

News September 9, 2025

நேபாளம் பற்றியெரிய இவர் தான் காரணம்

image

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதற்கு வித்திட்டவர் யார் தெரியுமா? சுடன் குருங் என்ற 36 வயது நபர். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஹமி நேபாள் என்ற NGO-வை நடத்திவரும் இவர், மாணவர்களை திரட்டி போராட்டத்தை தொடங்கினார். சோஷியல் மீடியாவில் தீவிர பிரசாரம் செய்தது ஜென் Z இளைஞர்களை திரட்ட உதவியது. இவருக்கு மேற்கத்திய நிறுவனங்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

News September 9, 2025

BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல் நிறைவு

image

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இரு அவைகளிலும் மொத்தம் 782 MP-க்கள் உள்ள நிலையில், 392 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார். NDA கூட்டணிக்கு இரு அவைகளிலும் சேர்த்து 422 MP-க்களின் ஆதரவு இருப்பதால், அதன் சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

News September 9, 2025

ITR தாக்கல் செய்ய கடைசி நாளில் முட்டி மோத வேண்டாம்!

image

2025-ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய செப்.15 கடைசி நாளாகும். தாமதமாக தாக்கல் செய்தால், வட்டி, ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடைசி நாளில் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து, போர்ட்டர் சுமையால் பலராலும் தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். ஒரு வாரமே இருப்பதால் முன்கூட்டியே திட்டமிடுங்கள். SHARE IT.

error: Content is protected !!