News September 30, 2025
CM சார், என்னை பழிவாங்குங்க, ஆனால்… விஜய் சவால்

கரூர் சம்பவம் பற்றி விளக்கம் அளித்த விஜய், CM ஸ்டாலினை சாடியுள்ளார். பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், தொண்டர்கள் மீது கைவைக்க என்றார். நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன் என்று சவால் விடுத்தார். கரூரில் மட்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், தன் அரசியல் பயணம் இனிதான் வலிமையோடு தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளார்.
Similar News
News September 30, 2025
பிரபல தமிழ் நடிகர் மனைவியை பிரிந்தார்… DIVORCE

ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2013-ல் திருமணம் செய்து கொண்ட இருவரும், கடந்த ஆண்டு மண வாழ்வில் கசப்பு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து கோரியிருந்தனர். பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் கூறிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், தனது குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
News September 30, 2025
3 நாள்கள் தூங்கியது ஏன்? விஜய்க்கு சிபிஐ கட்சி கேள்வி

விஜய் வீடியோவில் பேசியுள்ள விஷயத்துக்கு சிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் நடந்தவுடன் விஜய் சென்னைக்கு ஓடியது ஏன் என்றும், 3 நாள்களாக தூங்கியது ஏன் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தாமதமாக சென்றது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்கவேண்டும் என அக்கட்சியின் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
News September 30, 2025
தொடர்ந்து 5 நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு

அக்.1 (புதன்) ஆயுதபூஜை, அக்.2 விஜயதசமி ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை நாள்களாகும். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றுவரும் வகையில், வெள்ளிக்கிழமை (அக்.3) அன்றும் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறைகளாக இருப்பதால், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அரசு அலுவலர்களின் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.