News October 5, 2025

விஜய்யின் தவெக உடன் கூட்டணியா? விளக்கம்

image

நீண்ட காலமாகவே விஜய்யுடன் ராகுல் காந்திக்கு பழக்கம் உள்ளதாக KS அழகிரி கூறியுள்ளார். கரூர் துயர சம்பவத்தையடுத்து, விஜய்யுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ராகுல் பேசினார். இதனால் தவெகவுடன் காங்., கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அழகிரி, பேசியதற்காக எல்லாம் கூட்டணி அமைக்கும் என கூற முடியாது என்றார். திமுகவுடனான கூட்டணி உடையாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Similar News

News October 5, 2025

அதிகாலையில் பிரபல தமிழ் நடிகை வீட்டில் பரபரப்பு

image

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில், காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சொர்ணமால்யா வீட்டிற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, CM, த்ரிஷா உள்ளிட்டோர் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

News October 5, 2025

SC-ல் மேல்முறையீடு செய்த தவெக நிர்வாகிகள்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தலைமறைவாக உள்ள N.ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மனுவை விரைந்து விசாரிக்க கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் உள்ளனர்.

News October 5, 2025

கரூர் விவகாரம்: இன்றே விசாரணையை தொடங்கும் SIT

image

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், நாமக்கல் எஸ்பி விமலா, எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ள இக்குழு கரூருக்கு விரைந்துள்ளது. இன்றே விசாரணையை தொடங்கும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவதோடு, சிசிடிவிகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!