News September 28, 2025

சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய்

image

கரூர் துயரம் தொடர்பாக, நீதிமன்றத்தை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு சென்று, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக முறையிடவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால், விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News January 2, 2026

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

CBSE-ல் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார் கல்வி (SKILL EDUCATION) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, கணிதம், அறிவியல் போல திறன் சார் கல்வியும் இனி ஒரு பாடமாக இருக்கும். இதில், AI, கோடிங், கைவினை பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படும். இதனால், மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்து கொள்ளலாம்.

News January 2, 2026

ஜன.19-ல் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

image

கடந்த டிச.29-ல் பல்லடத்தில் ‘திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெற்றது. இந்நிலையில், ஜன.19-ல் தஞ்சை செங்கிப்பட்டியில் ‘திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தல் பணிகளுக்கு நிர்வாகிகளை தயார்படுத்தும் விதமாக அடுத்தடுத்து மாநாடுகளை திமுக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

News January 2, 2026

PM KISAN அடுத்த தவணைத் தொகை எப்போது கிடைக்கும்?

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணைத் தொகை தாமதமின்றி கிடைக்க, விவசாயிகள் e-KYC அப்டேட் செய்வது அவசியம். <>pmkisan.gov.in<<>> இணைய பக்கம் சென்று திட்டத்தில் பயனடைந்துவரும் விவசாயிகள் e-KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!