News December 6, 2024

அம்பேத்கர் பற்றி குட்டி ஸ்டோரி சொன்ன விஜய் (2/2)

image

அதேபோல், வெளிநாடுகளில் படித்துவிட்டு இங்கு அரசு அதிகாரியாக பணியாற்றிய அம்பேத்கரை, மும்பைக்கு அருகே உள்ள கிராம மக்கள் மாட்டு வண்டியில் அழைத்து வர முடிவு செய்தனர். ஆனால், அம்பேத்கருக்கு சமமாக அமர்ந்து வண்டி ஓட்ட வண்டிக்காரர் மறுக்கிறார். லண்டனில் பட்டம் பெற்றவரை விட தான் உயர்ந்தவர் என வண்டிக்காரர் நினைத்தது தன்னுடைய வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக விஜய் கூறியுள்ளார்.

Similar News

News April 30, 2025

உள்ளாட்சித் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையர் அதிரடி!

image

உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் காலியாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்திய அவர், வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த அறிவுறுத்தினார்.

News April 30, 2025

34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

image

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.

News April 30, 2025

இன்று CSK vs PBKS.. விசில் பறக்குமா?

image

ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப், பிளேஆஃப் செல்ல முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

error: Content is protected !!