News February 26, 2025

விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

image

தவெக 2ஆம் ஆண்டு விழாவில் பவுன்சர்களால் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், சோஷியல் மீடியாவிலும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் திமுகவின் ஆதரவாளர் என தவெகவினர் மேலே இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Similar News

News February 27, 2025

மகா சிவராத்திரி மகிமைகள் தெரியுமா?

image

மகா சிவராத்திரி மகிமைகள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, மகா சிவராத்திரியன்று கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது என்றும், இதனால் இன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

‘பெயர் சொல்லும் பிள்ளைகள் நீங்கள் தானே..’

image

உ.பி.யில் சண்டை ஒன்றில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு, அனில் கவுர் என்பவர் சிறையில் தவித்துள்ளார். தந்தையை காப்பாற்ற முடிவெடுத்த அவரின் பிள்ளைகள் ரிஷப், உபசனா இருவருமே சட்டம் பயின்று வக்கீலாக வழக்கில் ஆஜராகினர். அவர்களின் விடாமுயற்சி காரணமாக 11 ஆண்டுகள் கழித்து, அனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாசத்திற்காக சட்டத்துடன் மோதி, அப்பாவைக் காப்பாற்றிய இவர்கள்தான் ‘உண்மையில் பெயர் சொல்லும் பிள்ளை ’!

News February 27, 2025

அடுத்த மகா கும்பமேளா எப்போது?

image

பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாள்களாக நடைபெற்றுவந்த மகா கும்பமேளா இன்றோடு நிறைவு பெற்றது. இதனையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மகா கும்பமேளா 2037ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். இதற்கு முன்பாக, வரும் 2027ஆம் ஆண்டு நாசிக் நகரில் பூர்ண கும்பமேளா, 2033ஆம் ஆண்டு ஹரித்வாரில் மகா கும்பமேளா ஆகியவை நடைபெறவுள்ளன. நீங்கள் கும்பமேளாவில் புனித நீராடினீர்களா?

error: Content is protected !!