News September 28, 2025
விஜய் இழப்பீடு வழங்க வேண்டும்: விஷால்

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 38 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என விஷால் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய்யின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் அரசியல் பேரணி நடத்தும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 28, 2025
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு

தவெக கூட்டத்தில் நடைபெற்ற துயரத்தால், இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324-256306, 7010806322 உள்ளிட்ட எண்கள் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டத்தில் குழந்தைகள் சிலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
News September 28, 2025
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் துணை நிற்பார்: தவெக

கரூரில் ஏற்பட்ட துயரத்தால் விஜய் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தவெகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய்யும், தவெகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.