News September 28, 2025

சென்னை திரும்பினார் விஜய்

image

கரூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து திருச்சி, சென்னை விமான நிலையங்களில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதை தவிர்த்துவிட்டு அவர் சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் விரையும் நிலையில், விஜய் சென்னை திரும்பியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Similar News

News September 28, 2025

கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

image

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

News September 28, 2025

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் துணை நிற்பார்: தவெக

image

கரூரில் ஏற்பட்ட துயரத்தால் விஜய் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தவெகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய்யும், தவெகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News September 28, 2025

அபிமன்யு ஓரங்கட்டப்பட இதுதான் காரணமா?

image

WI-க்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் <<17844595>>அபிமன்யு ஈஸ்வரன்<<>> அணியில் சேர்க்கப்படாததற்கு அவரது தந்தை தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அபிமன்யுவின் தந்தை BCCI-க்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 2022-ல் அபிமன்யு அணியில் சேர்க்கப்பட்டாலும், இதுவரை Playing XI-ல் அவர் இடம்பெறவில்லை.

error: Content is protected !!