News October 7, 2025

மீண்டும் பணியை தொடங்கினார் விஜய்

image

கரூர் துயரத்திற்கு பிறகு அமைதியாக இருந்த விஜய், மீண்டும் அரசியல் பணியை தொடங்கி இருக்கிறார். தற்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக <<17937429>>வீடியோகால் <<>>மூலம் பேசி வரும் விஜய், விரைவில் கரூர் வருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், இன்று ஆனந்த், நிர்மல் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவின் அடிப்படையில், எந்த நேரத்திலும் விஜய் கரூருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Similar News

News October 7, 2025

BREAKING: 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

image

2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க் (UK), மைக்கேல் டிவோரெட்(FRANCE), ஜான் மார்ட்டினிஸ்(USA) ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் இயற்பியலில் அவர்களின் பங்களிப்புக்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மின் சுற்றுகளில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் முறையில் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்துள்ளனர்.

News October 7, 2025

பாம்பாக மாறி கொத்தும் மனைவி.. கதறும் கணவர்!

image

பெண், பாம்பாக உருமாறி பழிவாங்குவது போல பல படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ‘என்னோட பொண்டாட்டி உண்மையாவே பாம்பாக மாறி என்ன கொத்துறா’ என உ.பி.,யில் மிராஜ் என்பவர் புகார் அளித்து ஷாக் கொடுத்துள்ளார். இரவில் தூங்கும் போது, தனது மனைவி நசீமுன் பாம்பாக மாறி, தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சித்ததாகவும் நடுக்கத்துடன் புகார் அளித்துள்ளார். இதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் பலரும் உறைந்துள்ளனர்.

News October 7, 2025

மனசாட்சியுடன் பேசுங்கள்: முத்துசாமி

image

கரூர் துயரில் அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள். திமுக பயப்படவில்லை என்ற அவர், விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!