News January 24, 2025

நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் விஜய்

image

மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களின் செயலாளர்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய், அவர்களிடம் பதவிக்கு பணம் வாங்கப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிய உள்ளார்.

Similar News

News November 28, 2025

மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் லீவு

image

‘டிட்வா’ புயல் எதிரொலியால் தி<<18410367>>ருவாரூர், மயிலாடுதுறையை <<>>தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News November 28, 2025

திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

image

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.

News November 28, 2025

2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

image

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!