News January 24, 2025
நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் விஜய்

மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களின் செயலாளர்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய், அவர்களிடம் பதவிக்கு பணம் வாங்கப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிய உள்ளார்.
Similar News
News December 16, 2025
வாசலை அலங்கரிக்கும் ஸ்பெஷல் மார்கழி கோலங்கள்!

பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதிகாலையில் கோலமிட்டு இறை வழிபாடு செய்தால் நமது விருப்பங்கள் நிறைவேறுவதோடு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள கர்ம வினைகள் அகலும் என நம்பப்படுகிறது. அப்படியாக, வீட்டு வாசலில் போடக்கூடிய சில எளிய கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்த்து வீட்டிலும் முயற்சிக்கவும்..
News December 16, 2025
அடுத்த தலைமுறையை அழிக்கும் திமுக: H.ராஜா

TN-ல் 55 மாதங்களில் 6,700 படுகொலைகள் நடந்துள்ளதாக H.ராஜா சாடியுள்ளார். இவை அனைத்தும் மது, போதை வஸ்துகளால் நிகழ்ந்தவை எனவும், போதைப்பொருள் விற்பனையில் TN முதலிடத்தில் உள்ளதாகவும் சாடினார். திமுக EX நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த தலைமுறையை அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.


