News October 1, 2025
விஜய்தான் முக்கிய காரணம்: செந்தில் பாலாஜி

போலீஸ் சொல்லியும் விஜய் கேட்காததுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்தபோதுதான், மின் விநியோகம் தடைபட்டது. ஜெனரேட்டர் ஆஃப் ஆனபோதும், தெருவிளக்குகள் அணையவில்லை; மின் விநியோகம் இருந்தது எனக் கூறிய அவர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது விஜய் வாகனத்தின் உள்ளே சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News October 1, 2025
வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் ஆன்மா: PM மோடி

இன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் முன்பை விட வேறுபட்டவை என PM மோடி தெரிவித்துள்ளார். RSS நூற்றாண்டு விழாவில் பேசிய அவர் சாதி, மொழி, பிராந்தியவாத சிந்தனைகளால் ஏற்படும் பிளவுகள் தவிர்க்கப்படாவிட்டால் நாட்டை பலவீனப்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும், மக்கள் தொகை மாற்றம், சமூக சமத்துவத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாகவும், வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் ஆன்மாவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
அமெரிக்காவில் ஷட் டவுன் என்றால் என்ன?

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வேண்டும். ஆளுங்கட்சிக்கு செனட்டில் மெஜாரிட்டி இல்லையெனில், எதிர்க்கட்சியுடன் பேசி ஒப்புதலை பெறுவார்கள். அப்படி ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசின் நிர்வாக செலவுகளுக்கு (ஊழியர்களுக்கான சம்பளம் உள்பட) நிதி கிடைக்காமல் பணிகள் முற்றிலுமாக <<17883569>>ஷட் டவுன்<<>> ஆகும். இதுபோன்ற நெருக்கடியே இப்போது அமெரிக்காவில் நிலவுகிறது.
News October 1, 2025
BREAKING: கரூர் துயரம்.. தவெக தலைவர்களுக்கு ‘செக்’

கரூர் துயர சம்பவத்தையொட்டி, தவெகவின் முக்கியத் தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, விஜய்யின் பரப்புரை வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வழங்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது உதவியாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.