News December 9, 2024
உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் விஜய்?

சென்னையில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜன.12 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. Dy CM உதயநிதி தொடங்கி வைக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், திமுகவை கடுமையாக விஜய் விமர்சித்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 7, 2026
சற்றுமுன்: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது

சுமார் 10 மாதங்களுக்கு பிறகு சென்னையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலை ₹60 உயர்ந்து ₹928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹114.50 உயர்ந்து ₹2,043.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 7 முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வரும். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
News March 7, 2026
இதுதான் உண்மையான ‘தங்க வாத்து’

சீனாவின் ஒரு கிராமத்தில் ‘தங்க முட்டையிடும் வாத்து’ கதை நிஜத்தில் நிகழ்ந்துள்ளது. இறைச்சிக்காக வீட்டில் வளர்த்த வாத்தை அறுத்தபோது, அதன் வயிற்றில் 10 கிராம் தங்கம் இருந்துள்ளது. இது இந்திய மதிப்பின்படி ₹1.65 லட்சம் ஆகும். தங்கம் இருந்ததாக வரலாற்றில் கூறப்படும் சென்ஷுய் ஆற்றின் கரையோரம் வாத்து மேய்ந்ததால் துகள்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
News March 7, 2026
பைனலில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

அதிரடி பேட்டிங்கால் மிரட்டி வந்த அபிஷேக் சர்மா, WC-ல் தடுமாறி வருகிறார். இதனால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர் வெற்றியில் உள்ள அணியின் காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என முடிவு செய்துள்ளனராம்.


