News October 5, 2025
விஜய் முக்கிய முடிவு.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

உச்சநீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயர சம்பவ வழக்கில், விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆளும் அரசு இவ்விவகாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், SC-ஐ நாடி, போலீஸ் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 5, 2025
Cinema roundup: ‘கும்கி 2’ போஸ்டர்’ வெளியானது

*அருள்நிதியின் ‘ராம்போ’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
*கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் இணைந்து நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
*பிரபு சாலமனின் ‘கும்கி – 2’ அறிமுக போஸ்டர் வெளியானது.
*ரஷ்மிகா மந்தனாவின் ‘The Girlfriend’ திரைப்படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. *மும்பையில் நடிகை சமந்தா புதிய வீடு வாங்கியுள்ளார்.
News October 5, 2025
ATM-க்கு 4 இலக்க பின் நம்பர் வந்தது எப்படி தெரியுமா?

மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் 1967-ல் ATM மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில், பாதுகாப்புக்காக 6 இலக்க PIN-ஐ அவர் பரிந்துரைத்தார். ஆனால், மக்கள் இதனை நியாபகம் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என அவர் பணியாற்றிய வங்கி கூறியிருக்கிறது. இதனால் தான் ATM PIN-க்காக 4 இலக்கங்களை பரிந்துரைத்தார். அதனையே தற்போது வரை உலக வங்கிகள் பின்பற்றி வருகிறது. SHARE.
News October 5, 2025
BREAKING: ரகசியமாக சந்தித்தார் ஆதவ் அர்ஜூனா

விஜய்யின் உத்தரவின்பேரில், தவெகவின் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் காங்.,சை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின்கோரி SC-ஐ நாடியுள்ள நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது. மேலும், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள காங்கிரசை தவெக நாடியுள்ளதாகவும், காங்., முக்கிய தலைவர்களை ஆதவ் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.