News March 28, 2025
‘மன்னராட்சி முதல்வரே’ வார்னிங் கொடுத்த விஜய்

அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றைத் தடுக்க முடியாது என விஜய் ஆவேசமாகக் கூறியுள்ளார். பொதுக்குழுவில் பேசிய அவர், யாருக்கும் இல்லாத தடையை தவெகவுக்கு ஆளுங்கட்சி கொடுப்பது ஏன் என வினவினார். ‘மன்னராட்சி முதல்வரே’ தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரட்டை யானை தவெக கொடி நிச்சயம் பறக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என சூளுரைத்தார்.
Similar News
News December 6, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆசிரியருக்கு அதிரடி தண்டனை

குன்னூரில் கடந்த 2023-ல் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இசைப் பயிற்சிக்கு சென்ற மாணவியை, ஆசிரியர் பிரசாந்த் ரேப் செய்த நிலையில், மாணவி கர்ப்பமானார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹2 லட்சம் நிவாரணம் அளிக்கவும் TN அரசுக்கு உத்தரவிட்டது.
News December 6, 2025
அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<


