News September 20, 2025
வீக்கென்ட் அரசியலுக்கு விளக்கம் கொடுத்த விஜய்

‘வீக்கென்ட் அரசியல்’ என்ற விமர்சனத்துக்கு விஜய் பதிலளித்துள்ளார். நாகையில் பேசிய அவர், யாருக்கும் இடையூறு இல்லாமல் இருப்பதற்கே சனிக்கிழமையை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார். மேலும், அரசியலில் பலருக்கு ஓய்வு கொடுக்க விரும்புவதால், ஓய்வு நாளில் பிரசாரம் செய்வதாகவும் விளக்கமளித்துள்ளார். 2026-ல் திமுக – தவெக இடையே தான் போட்டி என்று மீண்டும் கூறிய விஜய், நேர்மையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
Similar News
News September 20, 2025
அரசியலில் ஓய்வு பெறும் வயது உண்டா?

அரசியலிலிருந்து சிலர் ஓய்வு பெற வேண்டியுள்ளதால், தான் ஓய்வு நாளில் (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்வதாக விஜய் கூறியிருந்தார். ஏற்கெனவே, 75 வயதை கடந்தவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு RSS-ல் உள்ளது. ஆனால், இந்தியாவில் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் வயது என்ற வரைமுறை இல்லை. அதிக வயதில் அரசியலில் பயணித்தவர்கள், பயணிப்பவர்கள் யாரெல்லாம் என்று மேலே உள்ள படங்களை swipe செய்து பாருங்கள்.
News September 20, 2025
63 வயது பாட்டிக்கும் 31 வயது இளைஞருக்கும் கல்யாணம்❤️❤️

63 வயதான அசாரஷி என்பவர், 31 வயது இளைஞரை கரம்பிடித்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான அந்த பெண்ணுக்கு 37 வயதில் மகன் இருக்கிறாராம். காஃபி ஷாப்பில் எதேச்சையாக சந்தித்த இருவருக்கும் இடையே நட்பு உருவாகி, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. அசாரஷியின் வயதை அறிந்தும்கூட அந்த இளைஞர் கரம்பிடித்துள்ளார். காதல் ஜோடிக்கு லைக் செய்து நீங்களும் வாழ்த்துங்கள்!
News September 20, 2025
தமிழில் 100/100 வாங்கினால் ₹10,000 பரிசு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழில் 100-க்கு 100 வாங்கினால் ₹10,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை முப்பெரும் விழாவில் முதற்கட்டமாக 142 மாணவர்களுக்கு CM, தலா ₹10,000 காசோலையை வழங்கி பாராட்டினார். நல்லா படிச்சு ₹10,000 வாங்குங்க மாணவர்களே..