News December 6, 2024
பாஜக, திமுகவை பொளந்து கட்டிய விஜய்

அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது, சட்டம் ஒழுங்கு, சமூகநீதியை பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றும் மணிப்பூரில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை கண்டுகொள்ளாத அரசு நம்மை மேல் இருந்து ஆண்டு கொண்டிருக்கிறது. அங்கு தான் அப்படியென்றால், இங்கு சமூக நீதி பேசும் அரசு, வேங்கைவயல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று திமுகவை விமர்சித்தார்.
Similar News
News November 22, 2025
அணு குண்டாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது!

அணு ஆயுத தாக்குதல், சுனாமி பேரலைகள், புயல்களை தாக்குப்பிடிக்கும் வகையில் முதற்கட்டமாக செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. 78,000 டன் எடையில் மிதக்கும் வகையிலான இந்த தீவு, 2028-ல் செயல்பாட்டிற்கு வரும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 138 மீட்டர் நீளம், 85 மீட்டர் அகலம் கொண்ட இந்த தீவில், 238 மனிதர்கள் 4 மாதங்களுக்கு எந்த தேவையும் இல்லாமல் வசிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறதாம்.
News November 22, 2025
BREAKING: விஜய் புதிய முடிவு!

நாளை முதல் பரப்புரையை தொடங்கும் விஜய், மாவட்ட வாரியாக நலிவடைந்த பிரிவினரை அழைத்து சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ரோடு ஷோக்களுக்கு அனுமதி கிடைத்தாலும் உள் அரங்க சந்திப்புகளை தொடரவும் முடிவு எடுத்துள்ளாராம். 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை தவெக தயாரித்துள்ளதாகவும், இன்று மாலை அதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News November 22, 2025
PM-ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: CM ஸ்டாலின்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக PM-ஐ எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறிய அவர், இதில் PM தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி எனவும், மத்திய அரசு இதில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


