News August 16, 2025
விறுவிறுப்படையும் தவெக மாநாட்டுப் பணிகள்

ஆக.21-ல் மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு, தூய்மைப் பணிகள், மகளிர் பாதுகாப்பு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட 9 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பறை, ஆகியவை அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Similar News
News August 16, 2025
தோனி நீக்கியதால் ஓய்வு பெற முடிவெடுத்தேன்: சேவாக்

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
கிருஷ்ணர் தலையில் மயில் இறகு இருக்கும் ரகசியம்!

வனவாசத்தின் போது, தாகத்தால் தவித்த சீதைக்கும், ராமருக்கும் மயில் ஒன்று உதவ முன்வந்தது. நீர் இருக்கும் இடம் வெகுதூரம் என்பதாலும், அடர்ந்த காடு என்பதாலும், அவர்கள் வழி தவறி போய்விட கூடாது என்பதற்காக தனது இறகை உதிர்த்துக் கொண்டே சென்றது மயில். நீர் நிலையை ராமர் அடைந்த போது, மயில் இறந்து கிடப்பதை பார்த்தார். அதன் தியாகத்திற்காக, கிருஷ்ணர் அவதாரத்தில் தலையில் மயிலிறகை சூடிக் கொண்டார் என்பது ஐதீகம்.
News August 16, 2025
கூலி படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை: ஆமீர் கான்

கூலி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் ₹20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள ஆமீர் கான், கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.