News February 26, 2025
ரஞ்சி இறுதிப் போட்டியில் விதர்பா – கேரளா மோதல்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் இன்று விதர்பா – கேரளா அணிகள் மோதுகின்றன. 90வது ரஞ்சி கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. விதர்பா அணி 3வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
Similar News
News February 26, 2025
மகா சிவராத்திரி.. கோயிலில் காணாமல் போன சிவலிங்கம்!

சிவராத்திரிக்கு தயாரான பக்தர்களுக்கு கோயிலை திறந்து பார்த்ததுமே அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். ஆனால், அவர்கள் வேறு எந்த பொருளையும் சீண்டவில்லை. அரபிக்கடல் கடற்கரையில் குஜராத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. லிங்கத்தை கடலில் போட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், தற்போது Deep Sea Diversஐ வைத்து தேடும் பணி தொடர்கிறது. இன்னைக்குள் கிடைச்சிருமா?
News February 26, 2025
தவெகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்

நேற்று பாஜகவிலிருந்து விலகிய நடிகையும், மாநில கலை, பண்பாட்டுப் பிரிவு செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைந்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் ஆண்டு விழா அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 26, 2025
சிவராத்திரியில் உங்கள் ராசிக்கான வழிபாடு? (1/2)

*மேஷம்: சிவாலயத்திற்கு பச்சரிசி, துவரம் பருப்பை தானமாகக் கொடுங்கள் *ரிஷபம்: அபிஷேகத்திற்கு பால், பன்னீர், இளநீர் வாங்கி கொடுங்கள் *மிதுனம்: வில்வம் சமர்ப்பித்து வழிபடுங்கள் *கடகம்: பால், இளநீர், சந்தனம், தேனை சிவாலயங்களில் சமர்ப்பியுங்கள் *சிம்மம்: அபிஷேகத்துக்கு விபூதி மற்றும் நாகலிங்கப் பூ, செண்பகம் ஆகிய மலர்களை வாங்கிக்கொடுங்கள் *கன்னி: வில்வம் சமர்ப்பித்து, தயிர்சாதம் நிவேதனம் செய்யுங்கள்.