News March 23, 2025
இன்று தவாகவில் இணையும் வெற்றிக்குமரன்

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தப்படியாக 2ஆம் கட்ட தலைவராக மக்களுக்கு மிகவும் அறிமுகமான மதுரை வெற்றிக்குமரன் இன்று தவாகவில் இணைகிறார். மதுரையில் நடக்கும் இணைப்பு விழாவில் வேல்முருகன் முன்னிலையில், வெற்றிக்குமரன் மற்றும் நாதகவில் இருந்து விலகிய பலர் தவாகவில் ஐக்கியமாக உள்ளனர். கடந்த வாரம் ஜெகதீசன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 24, 2025
இந்தியாவின் உயரமான கட்டடம் எது தெரியுமா?

உலகின் உயரமான கட்டடம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு துபாய் புர்ஜ் கலிஃபா என்று சொல்லி விடுவோம். அதன் உயரம் 2,717 அடி. இந்தியாவின் உயரமான கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா? மும்பை பலாய்ஸ் ராயல் டவர்தான் அது. 2018ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம், 1,050 அடி உயரத்தில் 88 தளங்களை கொண்டதாகும். இந்த பில்டிங் மேல இருந்து இன்னைக்கு குதிச்சா, நாளைக்குத்தான் கீழ வந்து சேருவோம் போல!
News March 24, 2025
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
News March 24, 2025
எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது: துரைமுருகன்

TNன் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணை கட்ட முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி தெரிவித்துள்ளார். நதிநீர் பிரச்னைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒரு கல்லைக் கூட எடுத்துச்செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் சென்றதாக இதுவரை 21,000 வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.