News April 3, 2025

மூத்த பத்திரிகையாளர் க.சிவஞானம் காலமானார்

image

மூத்த பத்திரிகையாளரும், மேடைப் பேச்சாளருமான க.சிவஞானம் உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழில் முன்னணி ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணிபுரிந்தவர். சிவஞானம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

Similar News

News March 23, 2026

புதுகை: பத்திரிக்கையாளர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அஞ்சல் வாக்கிற்கு 12D படிவத்தில் பாகம் 1 – ஐ முழுவதுமாக பூர்த்தி செய்து நாளைக்குள் (24.03.2026) சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தை புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்பிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 23, 2026

மாதவிடாய் நேரத்தில் கடவுளை தரிசிக்கலாமா?

image

புனித யாத்திரையின்போது மாதவிடாய் ஏற்பட்டால் கடவுளை தரிசிக்கலாமா? இந்த சந்தேகத்தை ஆன்மிக குரு பிரேமானந்த் மகாராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார். ‘மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று, பாவச் செயல் அல்ல. மாதவிடாய் ஏற்பட்டால் குளித்துவிட்டு தூரத்தில் இருந்து கடவுளை வணங்கலாம். அதேநேரம், பூஜை பொருள்களை தொடக் கூடாது. பிரசாதம் சமைக்கக் கூடாது. தூய பக்தியே இறைவனுக்கு தேவையானது’ என அவர் தெரிவித்துள்ளார்.

News March 23, 2026

புதுச்சேரியில் காங்கிரசுக்கு 16.. திமுகவுக்கு 12..!

image

புதுச்சேரியில் கடும் இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி காங்.,-16, திமுக-12, விசிக-1, CPI-1-ல் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 30 தொகுதிகளுக்கும் காங்கிரஸ், திமுகவினர் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தற்போது தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!