News October 24, 2024
இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சை, திருவள்ளூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
பெண்களின் Safety-க்காக போனில் இருக்கும் 2 ட்ரிக்ஸ்!

✱Setting-ல் ‘Emergency SOS’ ஆப்ஷனை ஆன் செய்யுங்க. உறவினர் or நண்பரின் Contact-டை Save பண்ணுங்க. போனின் பவர் பட்டனை 3 முறை அழுத்தினால், உங்க Live location போலீஸ் கன்ட்ரோல் ரூம் & Emergency Contact-க்கு மெசேஜ் சென்றுவிடும் ✱India 112 ஆப்- எந்த ஆபத்தாக இருந்தாலும் சரி, இந்த ஆப்பில் ஒரு கிளிக் செய்தால் போதும், 5- 10 நிமிடங்களில் போலீஸ் உதவ வந்துவிடும். இந்த பதிவை அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
வீடு தேடி வரும் ஐயப்ப பிரசாதம்! எப்படி வாங்குவது?

வீட்டில் இருந்தே அரவணை பாயாசம் பெறுவதற்கான ஏற்பாட்டை சபரிமலையில் உள்ள தபால் அலுவலகம் செய்துள்ளது. வீட்டருகே உள்ள தபால் நிலையத்தில், இதற்கான பணத்தை கட்டினால், சில தினங்களில் பிரசாதம் வீடு தேடி வரும். ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ₹520 செலுத்த வேண்டும். இதில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி & அர்ச்சனை பிரசாதம் இருக்கும். 4 டின்னுக்கு ₹960 & 10 டின்னுக்கு ₹1,760 செலுத்த வேண்டும்.
News December 5, 2025
அரசின் தனி அதிகார நோக்கமே காரணம்: ராகுல் காந்தி

நாடு முழுவதும் <<18476104>>இண்டிகோ<<>> விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே காரணம் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் ஃபிக்ஸிங் செய்யாமல், நியாயமாக போட்டிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விமான தாமதங்கள் போன்ற பிரச்னைகளுக்கான விலையை கொடுப்பது சாமானிய மக்களே என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


