News May 15, 2024
3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் & கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
வாக்காளர்களுக்கு நற்செய்தி.. EC புதிய அறிவிப்பு

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வசதி, நிழற்குடை, கழிப்பறை, வாக்காளர்களுக்கு பெஞ்ச் வசதி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டோவுடன் கூடிய வேட்பாளர்களின் போஸ்டர்களை வாக்குச்சாவடியில் ஒட்டுவதுடன், வாக்காளர் உதவி பூத், செல்போன் டெபாசிட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News March 22, 2026
பொடுகு தொல்லைக்கு ஈசி தீர்வு இருக்கு.. NOTE THIS

பொடுகு தொல்லை அதிகமாக இருக்கிறதா? இதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்குமே.. கவலை வேண்டாம். இதனை தீர்க்க, சிறிதளவு எலுமிச்சையும் தேனும் போதும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையும். இதை வாரத்திற்கு ஒருமுறை Try பண்ணுங்க. SHARE.
News March 22, 2026
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மேலும் ₹4,000 வந்தாச்சு.. HAPPY

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மாதாந்திர உதவித்தொகை ₹5,000-ல் இருந்து ₹9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில் இருந்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதியில் வெளியேறி நிலையில், உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை உயர்வு இம்மாதம் முதலே (மார்ச்) அமலுக்கு வந்துள்ளது. மேலும், 21 – 24 வரை மட்டுமே இருந்த வயது வரம்பு 18 – 25 ஆக மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


