News March 10, 2025
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்

தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC கணித்துள்ளது. மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 12ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News March 10, 2025
ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
News March 10, 2025
தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நாடாளுமன்றத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் எனக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்தை அவர் வாபஸ் பெற்ற போதிலும், அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
News March 10, 2025
PAKல் நடந்திருந்தாலும் INDதான் ஜெயித்திருக்கும்: அக்ரம்

CT தொடரை பாக். அல்லது எந்த நாட்டில் விளையாடி இருந்தாலும், IND தான் கோப்பையை வென்றிருக்கும் என முன்னாள் PAK வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் கூட தோற்காமல், T20 WC, CT தொடரை IND கைப்பற்றியது, அந்த அணியின் திறமை, தலைமைத்துவத்தை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் NZ, AUSக்கு எதிரான டெஸ்ட்டில் தோற்ற போதும் கம்பீர், ரோஹித்துக்கு BCCI ஆதரவு அளித்ததையும் பாராட்டியுள்ளார்.