News January 18, 2025
நாட்டை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு

கொல்கத்தா அரசு ஹாஸ்பிட்டலில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். 162 நாள்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அனீர்பான் தாஸ் இன்று மதியம் தீர்ப்பை வெளியிட உள்ளார்.
Similar News
News August 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

ஆக.28-ம் தேதியுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்டு 45 நாள்கள் நிறைவடைகிறது. இதனால், முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை அறிய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்னும் 4 நாள்களுக்குள் நல்ல செய்தி வரப் போகிறதாம்.
News August 24, 2025
இன்று இரவு 7 மணிக்கு தயாரா இருங்க!

சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ள படத்தில், வித்யூத் ஜம்வால் வில்லனாக மிரட்டவுள்ளார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று சென்னை தனியார் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
News August 24, 2025
இனி வானவில் பார்க்கமுடியாதா? ஆய்வில் பகீர்

இந்தியாவில் இனி வானவில்லை பார்ப்பது அரிது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் தற்போது ஆண்டுக்கு 117 வானவில் நாள்கள் உள்ள நிலையில், 2,100-க்குள் இது 4–5% அதிகரிக்குமாம். ஆனாலும், காலநிலை மாற்றத்தால் மக்கள் வசிக்கும் இடங்களில் வானவில் தோன்றுவது குறையும் எனவும், இமயமலை போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போ கடைசியா வானவில் பார்த்தீங்க?