News April 22, 2025
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் நாளை தீர்ப்பு..!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நாளை (ஏப்.23) தீர்ப்பளிக்க உள்ளது. டாஸ்மாக்கில் ₹1,000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்தது. ஆனால், சோதனை சட்டவிரோதமானது என டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நாளை தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 22, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் <<16177046>>இன்று (ஏப்.22)<<>> ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. பின்னர் முதல் வாரத்தில் சற்று இறக்கத்தைக் கண்டு அதன் பின்னர் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், இந்த மாதத்தில் மட்டும் (22 நாள்களில்) சவரனுக்கு ₹6,240 உயர்வைக் கண்டுள்ளது.
News April 22, 2025
சித்ரா பெளர்ணமி: கிரிவலப் பாதையில் சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலை சுற்றி 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. கிரிவலப் பாதையில் போதிய கழிவறைகள், குடிநீர் வசதிகளை செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பெளர்ணமியான மே 11 இரவு 8.47க்கு தொடங்கி மே 12, இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
News April 22, 2025
போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையுடன் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை அவர் என போப் பிரான்ஸூக்கு புகழாரம் சூட்டப்பட்டது. மனித நேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் என சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.