News April 25, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு

image

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

இது Expiry date இல்லை.. இந்த நம்பரின் அர்த்தம்

image

சிலிண்டரின் உறுதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். அதனை எப்போது செய்ய வேண்டும் என்ற குறியீடே Test date(சோதனை தேதி) ஆகும். இதில் (A25, B26, C27) எழுத்துக்கள் மாதத்தை குறிக்கின்றன. A (ஜனவரி- மார்ச்), B (ஏப்ரல்- ஜூன்), C(ஜூலை- செப்டம்பர்), D(அக்டோபர்- டிசம்பர்). எண்கள் வருடத்தை குறிக்கின்றன. 25, 26, 27 என்பது 2025, 2026, 2027 என்ற வருடத்தை குறிக்கிறது.

News August 24, 2025

நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

image

நகை மதிப்பில் 90% வரை கடன் வழங்கும் திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வட்டி விகிதம், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பத் தேர்வுகளுடன் கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹90 ஆயிரம் வரை கடன் பெற முடியும். பொதுத்துறை வங்கிகள் 60 – 70% வரையும், நிதி நிறுவனங்கள் 75% வரையும் நகை கடன் வழங்குகின்றன. SHARE IT

News August 24, 2025

சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு?

image

தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், ஆக.29 உடன் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் CM ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு அவரை நியமிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த டிஜிபி பரிந்துரையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் உள்ளனராம்.

error: Content is protected !!