News October 16, 2025

இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு

image

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள 8 பேரின் ஜாமின் மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சிறையில் உள்ள ராஜேஷ், விஜய், செந்தில் குமார் உள்ளிட்ட 8 பேரின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

Similar News

News October 16, 2025

சற்றுமுன்: பங்குச் சந்தைகள் பெரும் லாபத்துடன் நிறைவு

image

இந்திய பங்குச் சந்தைகள் இன்று நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 862 புள்ளிகள் உயர்ந்து 83,467 புள்ளிகளிலும், நிஃப்டி 261 புள்ளிகள் உயர்ந்து 25,585 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நெஸ்லே, கோடக் மஹிந்திரா, டைட்டன், ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. HDFC லைஃப், எடர்னல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், SBI லைஃப் இன்சூரன்ஸ், ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்தன.

News October 16, 2025

BREAKING: பண்டிகை விடுமுறை.. நாளை முதல் தொடங்குகிறது

image

தீபாவளியையொட்டி மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – மதுரை, மதுரை – தாம்பரம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது. IRCTC செயலி, இணையதளத்தில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT.

News October 16, 2025

தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!