News April 13, 2025
கவர்னர்களுக்கு எதிரான தீர்ப்பு.. மத்திய அரசின் அடுத்த மூவ்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக SC வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மாநில அரசு இயற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்து SC சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வரவேற்ற நிலையில், மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
Similar News
News January 19, 2026
உங்க கார், பைக்குக்கு உரிய ஆவணம் இருக்கா?

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் Vahan தரவுத்தளத்தில் மொத்தம் 40.7 கோடி வாகனங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், 30 கோடி வாகனங்கள்; அதாவது, 70%-க்கும் அதிகமான வாகனங்கள் புதுப்பிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி இயங்கு வருகின்றன. 2ஆண்டுகள் கடந்தும் விதிகளைப் பின்பற்றாத வாகனங்களின் பதிவு, தரவுத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். இதனால், அவை சட்டப்படி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.
News January 19, 2026
இளைய தலைமுறைக்கு வழிவிடுங்க: நிதின் கட்கரி

முக்கியப் பொறுப்புகளை இளைய தலைமுறையினா் ஏற்கும் வகையில், பழைய தலைமுறையினா் ஓய்வை அறிவித்து அவா்களுக்கு வழிவிட வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். நாகபுரியில் நடைபெற உள்ள தொழில் முதலீட்டு மாநாடு முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பழைய தலைமுறையினா் படிப்படியாக பொறுப்புகளிலிருந்து விலகி, அனைத்தும் சரிவர செயல்படத் தொடங்கும்போது, ஓய்வுபெற வேண்டும் என்று கூறினார்.
News January 19, 2026
ஒற்றை காலில் நிற்பது மிகவும் நல்லது

ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல் தோன்றினாலும், அது உடல் சமநிலை, தசை வலு, மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வயதுடன் குறையும் தசை இழப்பு, கீழே விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது. தினசரி பழக்கங்களில் இதைச் சேர்த்தால், உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.


